ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

ஈரானின் மனிதாபிமானத்திற்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறது ஜப்பான்


கடந்த மாதம் ஜப்பானில் ஏற்ப்பட்ட பலத்த சுனாமி பேரலைகளாலும், பூகம்பத்தாலும் ஏற்ப்பட்ட பாதிப்பில் 28,000 – கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததும்,  பலர் காணாமல் போனதும் உலக மக்கள் அனைவரையும் மறக்க முடியாத சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த பேரழிவால் ஸ்தம்பித்து போன ஜப்பான் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் உலக நாடுகள் அனைத்தும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் பல வழிகளில்
செய்து கொடுத்தது, அதில் ஈரானும் தனது பங்கிற்கு பல மனிதாபிமான உதவிகளை ஜப்பானிற்கு செய்து மிக பெறும் சகோதரத்துவத்தை அந்நாட்டுடன் பெற்று உள்ளதாக  ஜப்பானின், வெளியுறவு துறை அமைச்சர் சடோறு சடோ  செய்தியாளர்களுக்கு தெரிவித்து உள்ளார்.
இப்பெரும் சம்பவத்திற்கு பிறகு ஈரான் அம்பாசிடரும் அவருடன் ரெட் கிரசன்ட் சொசைட்டியின் நால்வர் அடங்கிய குழுவும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரடியாக வந்து மிகவும் மதிக்கமுடியாத பல மனிதாபிமான உதவிகளை செய்து, ஜப்பானுக்கும் ஈரானுக்கும் இடையே நல்ல நட்புறைவை ஏற்படுத்தினர் என்றும், ஈரானும் வெகு நாட்களுக்கு முன்பு இதுபோல் ஒரு பாதிப்பால் பரிதவித்ததையும் நினைவு கூர்ந்தார்.
ஜப்பானில் 1923-ல் ஏற்ப்பட்ட பாதிப்பில் 142,000 -க்கும் மேற்ப்பட்டோர் தங்கள் வாழ்க்கையை இழந்த அந்த பெறும் பாதிப்பிற்கு பிறகு ஏற்ப்பட்ட மிகப் பெறும் அசம்பாவிதம் இது என்று சடோ வருத்தத்தில் ஆழ்தினார்.

கருத்துகள் இல்லை: