செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

ஸ்ரீநகரில் தேசிய கொடியை ஏற்ற முயன்ற பா.ஜ.க இளைஞரணியினர் கைது

65-வது சுதந்திர தினத்தில் தேசப்பக்தி அளவை மிஞ்சியதால் ஜம்மு கஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் தேசிய கொடியை ஏற்ற சென்ற பா.ஜ.கவின் இளைஞரணியான யுவமோர்ச்சா அமைப்பைச் சார்ந்தவர்களை போலீசார் கைதுச் செய்தனர்.
ஸ்ரீநகரிலிருந்து 80 கி.மீ தொலைவில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 25 பேரை  போலீசார் கைதுச் செய்தனர்.
கஷ்மீரில் தனிப்பட்ட சூழலை கவனத்தில் கொண்டு பா.ஜ.க இளைஞரணியினரை கைதுச் செய்ததாகவும், பின்னர் இவர்களை கைதுச் செய்யாமலேயே உதம்பூருக்கு செல்ல அனுமதித்ததாகவும் போலீஸ் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: