திங்கள், அக்டோபர் 17, 2011

அமெரிக்காவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது – காம்னஈ

வாஷிங்டனில் சவூதி தூதரை கொலைச் செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என ஈரானின்
ஆன்மீக தலைவர் காம்னஈ தேசிய தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு உதவிச் செய்யும் நாடாக ஈரானை வேண்டுமென்றே சித்தரிக்கும் முயற்சிதான் இக்குற்றச்சாட்டு. ஈரானை தனிமைப் படுத்தவேண்டும் என வீரவசனம் பேசுகிறது. ஆனால் உலகின் முன்னிலையில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. 

அமெரிக்காவின் மோசமான தந்திரங்கள் செல்லுபடியாகாது. இவ்வாறு காம்னஈ தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: