புதன், நவம்பர் 02, 2011

அமெரிக்க இராணுவத்தை விட இந்திய இராணுவம் சக்திவாய்ந்ததா? கேட்கிறார் இம்ரான்கான்

கிரிக்கெட்டிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கும் இம்ரான்கான் ஞாயிறு அன்று லாஹூரில் நடந்த மிகப்பெரும் பொதுக்கூட்டத்தில்
தனது தெஹ்ரிக் ஏ இன்சாப் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் காஷ்மீர் மக்களின் உரிமைப் பிரச்சனைகளையும், ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்தியப்படையை பின்வாங்க செய்யவேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகளை கிளறி பேசினார்.

2013ல் நடக்கயிருக்கும் பொதுத்தேர்தலை நோக்கமாக நடத்தப்பட்ட இப்பொதுக்கூட்டத்தில் சுமார் 1 லட்சம் மக்கள் கலந்துகொண்டனர். பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள், குறிப்பாக ஊழல், பணவீக்கம்,  விலைவாசி உயர்வு, கல்வியின்மை, வேலைவாய்ப்பின்மை, மின்சார தட்டுப்பாட்டை மையமாக பேசிய அவர், அவ்வப்போது காஷ்மீர் பிரச்சனையையும் பேசினார்.
ஹிந்துஸ்தானிடம் நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், 700,000 இராணுவத்தினரை காஷ்மீரில் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள், எந்த படையும் நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க சக்திபெறவில்லை.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் வெற்றி பெற்றதா? இந்திய இராணுவம் என்ன அமெரிக்காவைவிட சக்திவாய்ந்ததா? அமெரிக்கர்கலாலேயே வெற்றிப்பெற முடியாதபோது நீங்கள் 700,000பேரை வைத்துக்கொண்டு எப்படி வெற்றிபெற முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

இம்ரான்கானின் கட்சி கடந்த பொதுத்தேர்தலில் கலந்துகொள்ளவில்லை, முந்தைய தேர்தலிலும் சொற்ப வாக்குகளே பெற்றுள்ள நிலையில், காஷ்மீர் மக்களுக்கு உரிமையை தரவேண்டும், படைகளை திரும்பப்பெறவேண்டும் என்றும் இந்தியாவை அழைத்துள்ளது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

sir oru kaena koo