சனி, ஜனவரி 14, 2012

புதிய நிர்வாகம் யார் தலைமையில் வந்தாலும் ஆதரவு!

தம்மாம் : பரங்கிப்பேட்டை-நல்வாழ்வு-சங்கம் , கிழக்கு மாகாணம், சவூதி அரேபியா அமைப்பின் மாதாந்திரக் கூட்டம், மாலிமார் இருப்பிடத்தில் நேற்று நடைப்பெற்றது. ஜமாஅத் தேர்தல், வெளிநாட்டு வாக்குகள் போன்ற முக்கிய விசயங்கள் குறித்து கலந்தலோசனை நடைபெற்றது. இறுதியில், கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. சென்ற மாதம் அமைக்கப்பட்டிருந்த " வெளிநாட்டு வாக்களர்களுக்கான ஆய்வுக்குழு" , அனைத்து அமைப்புகளையும் தொடர்புக்கொண்டு , வாக்களிப்பது எப்படி என்கிற விவரங்களை தெரிவித்து, கருத்துக்களையும் கேட்டிருந்தனர். அதன்படி இந்த அமைப்பின் சார்பாக அவசர கூட்டம் ஆலோசித்து, பதிலும் தரப்பட்டது. இறுதியாக அந்த குழுவினரிடமிருந்து, " வெளிநாடு வாழ் வாக்களர்களின் தேர்தல் சாத்தியகூறுகளின் அறிக்கை" ஜமாத்திடம் சமர்பிக்கப்படும் என்ற தகவல் மட்டுமே கிடைக்கப்பெற்றோம். இறுதியாக வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு வாக்களிப்பு உண்டா? அல்லது இல்லையா என்பதை ஜமாஅத் செயற்குழுவின் அறிவிப்பின் மூலமே அறியமுடிந்தது. ஆலோசனைக்காக தொடர்புகொண்ட குழுவோ, அல்லது ஜமாஅத் நிர்வாகமோ ஒவ்வொரு அமைப்பிற்கும் முறையாக அந்த அறிக்கையின் முடிவை தெரிவிக்காதது குறித்து , குழுவிற்கும் , ஜமாத்திற்கும் தெரிவித்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. இன்ஷா அல்லாஹ் , அமையப்போகும் புதிய நிர்வாகம் , எந்த முறையில் அமைந்தாலும், யார்தலைமையில் அமைந்தாலும், புதிய நிர்வாகிகளுக்கு, நம் அமைப்பின் ஆதரவினை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை: