வியாழன், ஜனவரி 05, 2012

பரபரப்பான சூழ்நிலையில் கூடுகிறது ஜமாஅத் ( பாராளமன்ற) செயற்குழு..!



தமிழக சட்டமன்ற தேர்தலில் நிலவாத பரபரப்பு கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் நிலவியது. அதனைப் போன்றே எதிர்வரும் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தலிலு

ம் நிலவும் என்று தெரிகிறது. தற்போதைய இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் துணைத்தலைவர் B.ஹமீது கவுஸ், ஐக்கிய மஜ்லிஸ் முன்னாள் தலைவர் மருத்துவர் S.நூர் முஹம்மது ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டி இடுவதால் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
இந்நிலையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் செயற்குழு ஜனவரி மாதம் 10-ஆம் தேதிக்குள் கூட்டப்பட்டு நிதிநிலை அறிக்கை, தேர்தல் தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்படும் என்று கடந்த செயற்குழுவில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகின்ற 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை செயற்குழு நடைபெறும் என்று தெரிகிறது. 
வெளிநாடு வாழ் பரங்கியர்களுக்கு வாக்குரிமை அளிப்பது தொடர்பான அறிக்கையும் இச்செயற்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது. தனித்தனியே சந்திப்புகள், இளைஞர் குழு சந்திப்புகள் -  முக்கிய ஆலோசனைகள் என்ற நிலையில் பரபரப்பினை கூட்டும் வகையில் ஜமாஅத் செயற்குழு நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது. இக்கூட்டம் தற்போதைய இஸ்லாமிய ஜமாஅத்தின் இறுதிச் செயற்குழு என்பது குறிப்பிடத்தக்கது 

நன்றி: mypno

பரங்கிபேட்டை குழுமம் என்ற பெயரில் இந்தைவைத்து தெளிவான புரங்கள் பேசபடுகின்றது. இதை அவ்வாசிரியர் புறம் என்று யடுத்து கொள்வர. அல்லது எதற்கு என்ன விளக்கம் கொடுக்க போகிறார்.

கருத்துகள் இல்லை: