புதன், ஏப்ரல் 06, 2011

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:ஆர்.எஸ்.எஸ்ஸும், அஸிமானந்தாவும் தப்பிக்கவியலாது

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் அளித்த வாக்குமூலத்தை ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா வாபஸ் பெற்றாலும் நீதிமன்றம் அதனை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளும் என கருதப்படுகிறது.
வழக்கில் குற்றவியல் நடவடிக்கை சட்டம் 154-பிரிவின்படி மாஜிஸ்ட்ரேட் முன்பு முன்னர் அளித்த வாக்குமூலத்திலிருந்து வாபஸ் பெறுவது அவ்வளவு எளிதானல்ல என சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் முன்பு அளித்த வாக்குமூலத்தை வேண்டுமானால், நிர்பந்தம் மற்றும் சித்திரவதையின் காரணமாக வாக்குமூலம் அளித்தேன் என கூறி மறுத்தால் நீதிமன்றம் அங்கீகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், மாஜிஸ்ட்ரேட் முன்பு அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற்றால் நீதிமன்றம் அதனை அங்கீகரிக்காது. மட்டுமல்ல, அஸிமானந்தாவின் மீது நீதிமன்றத்தை தவறாக புரிந்துக்கொள்ள வைத்ததாக இன்னொரு வழக்கும் தொடரப்படும்.
முன்னாள் பா.ஜ.க தலைவர் உமாபாரதி அஜ்மீர் சிறையில் வைத்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் சந்தித்த பிறகே அஸிமானந்தா குண்டுவெடிப்பு வழக்குகளில் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
தன்னை அப்ரூவராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென அளித்த மனுவை வாபஸ் பெறுவதாகவும் அஸிமானந்தா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதே சிறையிலுள்ள அஸிமானந்தாவை உமாபாரதி சந்திக்க முயன்றபோதும் சிறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் மறுத்ததைத் தொடர்ந்து இதர ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்து உமாபாரதி விவாதித்தார்.
இவ்வழக்குகளில் எதிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகளைக் குறித்து இவர்கள் விவாதித்ததாக கருதப்படுகிறது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு நாசவேலைகளில் தங்களுடைய தலைவர் இந்திரேஷ்குமார் உள்ளிட்டவர்களுக்கு பங்குண்டு என அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் நிம்மதி பெருமூச்சுவிட்டது.
அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே என்.ஐ.ஏவும், சி.பி.ஐயும் வழக்குகளை விசாரிக்கின்றன என்ற எண்ணத்தில் ஆர்.எஸ்.எஸ் இருந்து வந்தது. ஆனால், வாக்குமூலத்தின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களின் ஆவணங்கள் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களிலிருந்து கிடைத்ததாகவும், அவை சங்க்பரிவார் தலைவர்களின் தொடர்பை ஊர்ஜிதப்படுத்துவதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர்.
குண்டுவெடிப்பிற்கு தேவையான பொருட்களை வாங்கிய கடைகளையும் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனடிப்படையில் அஸிமானந்தா வாக்குமூலத்தை வாபஸ் பெற்றாலும், குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவாரத்தின் பங்கு நிரூபிக்கவியலும் என நேற்று முன்தினம் என்.ஐ.ஏ உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.(இச்செய்தி ஏற்கனவே தூது ஆன்லைனில் வெளியாகியிருந்தது.)
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பான விபரங்களை இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியா பாகிஸ்தானிடம் ஒப்படைத்திருந்தது

கருத்துகள் இல்லை: