சனி, ஆகஸ்ட் 27, 2011

ஷெஹ்லா மஸூத் கொலை: பா.ஜ.க எம்.எல்.ஏவிடம் விசாரணை

தகவல் உரிமை ஆர்வலர் ஷெஹ்லா மஸூத் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏவான த்ரூவ் நாராயணன் சிங்கை விசாரணைச் செய்வோம் என போலீஸ் அறிவித்துள்ளது.

ஷெஹ்லா மஸுதுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்ட 18 பேருடன் நாராயணன் சிங்கிடம் விசாரணை நடத்தப்படும் என போலீஸ் கூறியுள்ளது.
போபால் எம்.எல்.ஏவிடம் ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 16-ஆம் தேதி தனது வீட்டிற்கு முன்பு வைத்து ஷெஹ்லா மஸூத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கருத்துகள் இல்லை: