புதன், செப்டம்பர் 21, 2011

குஜராத்:முஸ்லிம்களின் கைதுக்கெதிராக சமூக சேவகர்கள் கண்டனம்

குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆட்சேபம்
தெரிவித்து அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தபொழுது கைது செய்யப்பட்டனர். இந்தக் கைதைக் கண்டித்து சமூக சேவகர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
சினிமா தயாரிப்பாளர் மகேஷ் பட், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல சமூகப் பிரமுகர்கள் இந்தக் கைதைக் கண்டித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: