திங்கள், டிசம்பர் 12, 2011

பொய் பிரச்சாரம் நடக்கிறது: பேராசிரியர் க.அன்பழகன் கண்டனம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தி.மு.க., இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில்

அப்போது தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன் பேசுகையில், பெரியாறு அணை நீர் மூலம் தமிழகத்தின் பல இடங்களில் வாழ்க்கை நடந்து வருகிறது. கேரளா ஏதோ ஒரு நோக்கத்துடன் மக்களுக்கு தீமை ஏற்படும் எனவும், அணை உடைந்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக சட்டசபையை பயன்படுத்தி தமிழகத்தின் உரிமையை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என கூறினார்.
 நடந்து வரும் உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க., பொதுச்செயலாளர் க.அன்பழகன் துவக்கிவைத்து போராட்டத்தில்கலந்து கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: