புதன், டிசம்பர் 28, 2011

சிறுவனின் ஆணுறுப்பை வெட்டிச் சென்ற இனந்தெரியாத குழு!

சிறுவன் ஒருவனின் ஆணுறுப்பையும் அதனுடன் ஒட்டிய பகுதிகளையும் வெட்டிச் சென்ற சம்பவம் ஒன்று ஹங்கேரி  போலீஸ்  பிரிவில் இடம்பெற்றுள்ளது என  தெரியவருகிறது.


வீட்டில் தனிமையில் இந்தச் சிறுவன் இருந்த போது அங்கு திடீரென உள்நுழைந்த இனந்தெரியாத குழுவொன்று அவனது ஆணுறுப்பை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இக் கொடூரமான செயல் பெரும்பாண்மை இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட சிறுவன் துடி துடித்துக் கத்தியுள்ளான். அவனை உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவன் இறந்துவிட்டதாக வைத்தியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 16ம் தேதி  இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தற்போது வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: